×

குடியாத்தத்தில் 12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்; போக்சோ சட்டத்தின் கீழ் கைது

குடியாத்தம்: பிளஸ்2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். குடியாத்தம், செருவங்கியை சேர்ந்தவர் பிரதீப்(22). குடியாத்தத்தில் வெல்டிங் பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் குடியாத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் பிளஸ்2 படிக்கும் 16 வயது மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் மகளிடம் விசாரித்த போது, மாணவியின் கர்ப்பத்துக்கு வெல்டிங் தொழிலாளி பிரதீப் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kudiatham , A teenager who made a class 12 student pregnant in Kudiatham; Arrest under POCSO Act
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...