×

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரனை

கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவில் குண்டுவெடித்தபோது காயமடைந்த ஒருவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிம்கார்டு வாங்க தந்த ஆதார் எண், உதகை அருகே குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். குந்தசப்பையை சேர்ந்தவரை கோவைக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mangalore , Police interrogate a man from Utkai in connection with the Mangalore auto blast
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு –...