×

பப்பில் மப்பு ஆனவரை தூக்கிச் சென்றனர் கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பலாத்காரம்: மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது  

திருவனந்தபுரம்: கேரளாவில் பப்புக்கு சென்று மப்பு ஆன 19 வயது மாடல் அழகியை தூக்கிச் சென்று, ஓடும் ஜீப்பில் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாடல் அழகியும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்திலுள்ள ஒரு மது பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான டிம்பிள் லாவா என்பருடன் மது அருந்துவதற்காக சென்றார்.

அதிகமாக குடித்த  மாடல் அழகி பாரில் மயங்கி விழுந்தார். அந்த பாரில் மது அருந்தி கொண்டிருந்த 3 வாலிபர்கள் அவரை வீட்டில் கொண்டு விடுவதாக கூறினர். பின்னர், தங்களுடைய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர். ஆனால்,  கொச்சி நகரத்திலேயே ஜீப்பில் சுற்றிய அவர்கள், அந்த வாகனத்தில் வைத்து மாடல் அழகியை மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், காலையில் அவர் தங்கியிருக்கும் கொச்சி காக்கநாட்டிலுள்ள வீட்டில் விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அந்த மாடல் அழகி  தன்னுடைய தோழி ஒருவரை போனில் அழைத்து விவரத்தை கூறினார். அவரது தோழி இது குறித்து எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த மாடல் அழகியின் உடலில் காயங்கள் இருப்பது  தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் மாடல் அழகியை பலாத்காரம் செய்தது கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த விவேக், சுதீப் மற்றும் நிதின் என தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பலாத்காரத்திற்கு ராஜஸ்தான் மாடல் அழகி டிம்பிள் லாவாவும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

* பீரில் மயக்க மருந்தா?
பாதிக்கப்பட்ட மாடல் அழகி கூறுகையில், ‘கொச்சியில் உள்ள ஓட்டலில் டிஜெ பார்ட்டி நடப்பதாக கூறி டிம்பிள் லாவா என்னை அழைத்து சென்றார். அங்கு பீர் குடித்தோம். அதில் ஏதோ கலக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். அதை குடித்ததும் மயங்கி விட்டேன். பின்னர், 3 வாலிபர்கள் என்னை ஜீப்பில் கொண்டு சென்று பலாத்காரம் செய்தனர்,’ என்று தெரிவித்தார்.

Tags : Kerala , Gang-rape of a model in a jeep in Kerala: 4 arrested, including another beauty
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...