×

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடக்க உள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்க வருவது தமிழ் மொழியின் மீதும், தமிழ் பண்பாட்டின்மீதும் அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டினை, மாறாப் பற்றினை நமக்கு உணர்த்துகிறது. இயல், இசை, நாடகம் என முப்பரிமாணங்களைக் கொண்ட முத்தமிழை உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு பிரதமருக்கு தமிழ் மக்களின் சார்பாக. அதிமுக சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரால் இன்று (நேற்று) துவக்கி வைக்கப்படும் ‘காசி தமிழ் சங்கமம்’ விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Kashi Tamil Sangam Festival ,Varanasi , Month-long Kashi Tamil Sangam Festival in Varanasi to make history: O. Panneerselvam Congratulations
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை