×

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா

தாய்லாந்து: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெண்கலம் வென்றார். 3 முறை ஆசிய சாம்பியன் ஆன ஜப்பானின் ஹினா ஹயாடாவை 4-2 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தி வென்றுள்ளார்.  

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் ஹினா ஹயாட்டா ஆகியோர் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார். அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, ஜப்பானின் மிமா இடோவிடம்  2-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் வெண்கல பதக்க போட்டியில் மணிகா விளையாடினார். ஹினா ஹயாட்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் மணிகா பத்ரா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Tags : India ,Manika Patra ,Asia Cup , India's Manika Patra won bronze in Asia Cup table tennis tournament
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!