×

திருத்தணி அருகே பரபரப்பு; விவசாய கிணற்றில் வாலிபர் சடலம்: கொலையா? போலீஸ் விசாரணை

திருத்தணி: திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மிதந்த வாலிபர் சடலத்தை போலீசார் மீட்டு இறந்தவர் யார், அவரை கொலை செய்தார்களா என்று விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சூரியநகரம் கிராமத்தில் சென்னையை சேர்ந்தவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கொடுத்த தகவல்படி, திருத்தணி போலீசாரும் திருத்தணி தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர். இதன்பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Bustle ,Tiruthani , Bustle near Tiruthani; Body of teenager in agricultural well: murder? Police investigation
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்