×

ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவக் கொலை; ஆணின் உறுப்பு துண்டிப்பு பெண்ணின் உறுப்பில் வெட்டு: வனப்பகுதியில் இருந்து இருவரது சடலமும் மீட்பு

உதய்பூர்: ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆணின் உறுப்பு வெட்டப்பட்டும், பெண்ணின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது. வனப்பகுதியில் இருந்து இருவரது சடலத்தையும் போலீசார் மீட்டனர்.  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் மஜாவாட் கிராமத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் சடலங்கள் கிடந்தன.

தகவலறிந்த கோகுந்தா போலீசார், இருவரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜேஷ்குமார் கூறுகையில், ‘சோனு சிங் (28) என்ற பெண்ணும், ராகுல் மீனா (30) என்ற ஆணும் வனப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இளம்பெண் குர்தி மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்தார்; இளைஞர் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்திருந்தனர். இருவரின் உடல்களும் அரை நிர்வாணமாக கிடந்தன. அந்த இளைஞரின் அந்தரங்க பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

பெண்ணின் பிறப்புறுப்பில் வெட்டு காயங்கள் இருந்தன. காதலர்கள் இருவரும் கற்களாலும், கூர்மையான ஆயுதத்தாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ராகுல் மீனா, ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது காதலியான அந்தப் பெண் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரது வீடுகளும் 10 கிமீ சுற்றளவில் உள்ள அடுத்தடுத்த கிராமங்களில் இருந்தன. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் இச்சம்பவம் கவுரவக் கொலையாக இருக்கலாம். சம்பவ இடத்தில் இருவரது சடலங்களுடன் ஒரு செல்போன் மீட்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருவரும் கடந்த 15ம் தேதி முதல் மாயமான நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றார்.

Tags : Rajasthan , Honor killing of romantic couple in Rajasthan; Mutilation of male female genital mutilation: recovery of two corpses from forest
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்