×

ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆதரவு..!

நியூயார்க் : ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில், இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக பிரான்ஸ் நாட்டின் துணை பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

அந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் அதன் அதிகாரத்தையும், செயல்திறனையும் வலுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதிலிருந்து அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார். அதன் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாக்க விரிவாக்கப்பட்ட கவுன்சில் 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம் என அவர் கூறினார். இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வார்ட் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க ஐ.நா. பாதுகாப்பு கவுசிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறினார்.      


Tags : United Nations Security Council ,France ,UK ,India , United, Nation, Council, India, Permanent, France, England, Support
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது