மதுரை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் வழக்கில் மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை மாற்ற வேண்டும். மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் அரசு மருத்துவர்கள் சங்கம் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மதுரையில் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.