சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை பன்னீர்ச்செல்வம் மீறியுள்ளதாக பழனிச்சாமி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னதாக பன்னீர் செல்வத்துக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.