மதுரை: மதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் ஏற்படுத்தியது குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆறுமுகம் என்பவர் மனு அளித்துள்ளார். மதுரை நகர் பகுதியில் சுற்றுசூழலை பாதுகாக்க பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து பூங்காக்களிலும் அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்த உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.