சென்னை: குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்றும் 14417, 1098 ஆகிய உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.