×

தாம்பரத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விமானப்படை வீரர்கள் சாகசம்

சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி நிறைவு செய்த, 841 விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில், விமானப்படை தளத்தில் 64 வார பயிற்சிகள் நிறைவு செய்த மற்றும் வங்காளதேசம், மியான்மர், நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் 7 பேர் என மொத்தம் 841 விமானப்படை வீரர்கள்  பயிற்சி நிறைவு செய்துள்ளனர்.  

இந்த அணிவகுப்பில், தாம்பரம் விமானப்படை நிலைய அதிகாரி ஏர் கமோடர் விபுள்சிங் கலந்துகொண்டு, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது, விமானப்படை வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், பயிற்சியில் சிறந்து விளங்கிய விமானப்படை வீரர்களுக்கு கோப்பை வழங்கி கவுரவித்தார்.

அப்போது, தாம்பரம் விமானப்படை நிலைய அதிகாரி ஏர் கமோடர் விபுள்சிங் கூறுகையில்:
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விமானப்படை வீரர்கள், தொழில்நுட்ப அறிவுகளை வளர்த்துக்கொண்டு திறமையாக செயல்பட வேண்டும்’’ என அறிவுரை வழங்கினார்.

Tags : Tambaram , Training Completion Parade in Tambaram, Airmen Adventure
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!