தெலங்கானா: ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன வாயு கசிவினால் 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.