டெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் சதி வலையில் வீழ்ந்த ஓட்டுநரை டெல்லி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்தியா குறித்த ரகசிய தகவல்களை ஓட்டுநர் பகிர்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது.