சென்னை: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பணிகளுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தனியார் செயலி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் பணிகளுக்காக வசூலித்த ரூ.30 லட்சத்தை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. யூடிபர் கார்த்தி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.