சென்னை: ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. காவலர் முத்து தொடர்ந்த வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு அளித்துள்ளனர். ஆர்டர்லி பணியை செய்ய மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணிநீக்கம் செய்துள்ளதாக காவலர் முத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.