×

வீட்டில் பிச்சை எடுப்பது போல் வந்து தெலுங்கு தேசம் நிர்வாகியை கத்தியால் வெட்டிய பக்தர்-காக்கிநாடாவில் பரபரப்பு

திருமலை : காக்கிநாடாவில் வீட்டில் பிச்சை எடுப்பதுபோல் வந்து தெலுங்குதேசம் நிர்வாகியை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி பகுதியை சேர்ந்தவர் சேஷகிரி ராவ். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மண்டல பரிஷத் தலைவர். சேஷகிரி ராவ் நேற்று காலை வீட்டில் இருந்த போது   பவானியம்மன் மாலை அணிந்து பிச்சை கேட்டு ஒரு பக்தர் வந்துள்ளார். இதனையடுத்து,  அவர் வீட்டில் இருந்து ஒரு தட்டில் அரிசி கொண்டு வந்து அந்த பக்தருக்கு போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அந்த பக்தர் பிச்சை எடுப்பதற்காக கையில் வைத்திருந்த துணிக்கு அடியில் மறைத்து கொண்டு வந்த கத்தியால் சேஷகிரி ராவ்வை வெட்டியுள்ளார்.  படுகாயமடைந்த சேஷகிரி ராவ் சத்தம் போட்டு கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வந்தனர். அதற்குள் அந்த பக்தர் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பைக்கில் தப்பிச்சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சேஷகிரி ராவ் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சேஷகிரி ராவை அக்கம்பக்கத்தினர்  காக்கிநாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காக்கிநாடா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு வந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேஷகிரி ராவை தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் யனமலா ராமகிருஷ்ணுடு, சின்னராஜப்பா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து, குடும்பத்தினருக்கு அறுதல் கூறினர். கொலை முயற்சி  தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

Tags : Desam ,Kakinada , Thirumalai: In Kakinada, an incident occurred in Kakinada where a man tried to kill a Telugu Desam executive with a knife as if he was begging at home.
× RELATED தேர்தல் அறிக்கை வெளியிட மறுப்பு;...