×

வால்பாறை அருகே தள்ளுவண்டி கடைகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம்-கன்றுக்குட்டியை மிதித்து கொன்றது

வால்பாறை : வால்பாறை அருகே சாலையோர தள்ளுவண்டி கடைகளை காட்டு யானை உடைத்து துவம்சம் செய்தது.வால்பாறை அடுத்துள்ளது கூழாங்கல் ஆறு. வால்பாறை வரும் சுற்றுலா  பயணிகள் ஆற்றில் குளித்தும் அப்பகுதியில் உணவருந்தி மகிழ்வது வழக்கம். அப்பகுதியில் சாலையோரம் சில கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, 3 தள்ளுவண்டி கடைகளை உடைத்து உணவு  தேடி உள்ளது. கடைகளை உடைத்து உள்ளிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டும் கடையை நடு ரோட்டிற்கு இழுத்தும் சென்றது. மேலும், அதே பகுதியில் படுத்திருந்த எருமை கன்றுகுட்டியை காலால் மிதித்து கொன்றது.

நேற்று காலை அப்பகுதிக்கு நடைபயிற்சி சென்றவர்கள் கடைகள் துவம்சம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் பரவியது. கடை வைத்திருந்தவர்கள் அப்பகுதியில் கடைகள் உடைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், யாரும் வனத்துறை, நகராட்சியில் புகார் தெரிவிக்கவில்லை.

இதையறிந்த வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், கவுன்சிலர் மணிகண்டன், நகராட்சி தூய்மை பணி ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் சுகாதாரமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Atakasam ,Valparai , Valparai: A wild elephant destroyed roadside trolley shops near Valparai. Valparai is next to it.
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது