×

கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியுமான பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம்

சென்னை: கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியுமான பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியுமான பிரியா மூட்டு வலி காரணமாக ஆபரேஷன் செய்து கொண்டார். சிகிச்சைக்கு பிறகும் பிரியாவின் காலில் வலி அதிகரித்ததால் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றினர்.

பின்னர் அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்த நிலையில் மாணவி பிரியா உயிரிழந்தார். இதனையடுத்து பிரியாவுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



Tags : Priya , Change of section in case related to death of football player and college student Priya
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...