×

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  அதை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி தீபாவளிப் பண்டிகை தினத்தை முன்னிட்டு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 25ம் தேதி நோன்பு பண்டிகை என்பதால், அரசு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், அந்த நாளை ஈடுசெய்யும் வகையில் வேறு ஒரு நாளில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதை அடுத்து மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,School Education Department , Schools to open in Tamil Nadu tomorrow: School Education Department announcement
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...