×

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசுக்கு முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா, மீனவர்கள் கைது விஷயத்தில் ஒன்றிய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Anbumani , Anbumani pleads with the Sri Lankan government to resolve the issue of fishermen
× RELATED இந்தியில் ஒட்டுவேட்டை நடத்தும் பாமக...