×

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயினருவியில் ஐயப்ப பக்தர்கள் இன்று ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மெயின் அருவியில் கடந்த மூன்று தினங்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயின் அருவியில் நான்காவது நாளாக இன்றும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இன்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரதம் இருப்பதற்காக மாலை அணிந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மெயின் அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.



Tags : Ayyappa ,Mainaruvi , For the convenience of Ayyappa devotees standing and bathing in the Kurdalam Mainaruvi is allowed
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்