சென்னை: 2018ல் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கணவரை கொன்ற மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவி வினோதினி, காதலன் அந்தோணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவர் கதிரவனின் கண்ணைக் கட்டி விளையாடுவதுபோல் சுத்தியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.