கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவர்கள் 14 பேருக்கு வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் பருத்தித்துறையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.