சென்னை: புதுச்சேரியில் தனியார்மயமாக்கல் தொடர்பான டெண்டரில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் டெண்டர் அறிவிப்பை எதிர்த்து போராட்டக்குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை, 2003ம் ஆண்டு மின்சார சட்டத்திற்கு எதிரானது என போராட்டக்குழு தெரிவித்துள்ளார்.