சென்னை : சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த பயணச் சீட்டு வழங்குவது குறித்து முதலமைச்சர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். ஒரே பயணச் சீட்டு பெறுவதன் மூலம் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.