திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 8 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர், நீதிபதி முன் ஆஜராகி சம்மதம் தெரிவித்தனர். திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகி சம்மதம் தெரிவிக்கப்பட்டது.