×

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை: குரூப்2, 2ஏ தேர்வு மதிப்பெண்ணை வெளியிட வேண்டும்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வு  மதிப்பெண் விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை  வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:5,529 இடங்களுக்கான, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முடிவினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போதைய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை. எனவே, முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்களை வெளியிட தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : O. Panneerselvam , O. Panneerselvam, Request, Group 2, 2A Marks to be published
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்