×

சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல இன்று முதல் வரும் ஜன.20ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை  புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இருந்து இந்தாண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு  ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app. ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்யலாம். மேலும், தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


Tags : Sabarimala ,Minister ,SS Sivasankar , Sabarimala, from today, special bus, Minister S.S. Shivashankar, announcement
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு