×

நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்

புதுடெல்லி: நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டான விக்ரம்- எஸ் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்வெளி துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.  விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் வளர்ச்சி அடைய இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம். நாட்டில் பல தனியார் நிறுவனங்கள்  விண்வெளி துறையில் இறங்கி உள்ளன. அதில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளின் பங்கெடுப்பால் வளர்ச்சி கண்டு வரும் ஸ்கைரூட், தனது முதல் விண்வெளி பயணத்தை துவங்க தயாராகி வருகிறது.

இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக, இந்த ராக்கெட்டுக்கு விக்ரம்-எஸ் னெ பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் தொடர்ந்து பல ராக்கெட்டுகளை ஸ்கைரூட் ஏவ இருக்கிறது. விக்ரம்-எஸ் ராக்கெட்டைத் தொடர்ந்து விக்ரம் வரிசையின் அடுத்த 3 ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், நாளை (18ம் தேதி) காலை 11.30 மணிக்கு விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.



Tags : Vikram , The country's first private rocket, the Vikram, will take off tomorrow
× RELATED உதவி பேராசிரியர் ஓட்டிய கார் கட்டுபாட்டை இழந்து விபத்து