×

டெல்லி காதல் கொலை சம்பவம்; ‘அந்த அரக்கனை கடுமையாக தண்டிக்கணும்’: நடிகை ஸ்வரா பாஸ்கர் கோபம்

மும்பை: டெல்லி காதல் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான அந்த அரக்கனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் (26) என்பவர் தனது காதலன் அப்தாப் பூனாவாலா (26) என்பவரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியில் தனது காதலியை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த கொடூர சம்பவம் குறித்து கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. போலீசார் வழக்கு விசாரணையை துரிதமாக முடிப்பார்கள் என்று நம்புகிறேன்; அந்த அரக்கனை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,love murder incident ,Swara Bhaskar , Delhi love murder incident; 'That monster should be punished severely': Actress Swara Bhaskar angry
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு