சென்னை: கோயில்களில் திருப்பணி நடைபெற்றாலும் திருமணத்திற்கு அனுமதி உண்டு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோயிலில் முறையாக நிர்வாகம் நடக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அறநிலையத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். பக்தர்களிடம் இருந்து பெறப்படும் காணிக்கை கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.