மதுரை : மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி வீடு புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பெண்ணைக் கட்டிப்போட்டு 11 சவரன் நகைகள், ரூ.60,000 பணத்தை திருடி சென்றனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.