×

சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திண்டுக்கல்: சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முத்தழகுபட்டியைச் சேர்ந்த செபஸ்தியார் என்பவரை முன்விரோதத்தால் கடந்த 5.5.14ல் 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 8 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபாரதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

Tags : Dindigul , Loader, murder, life sentence
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து