சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் தரம் உயர்த்த உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.