சென்னை: சென்னை முகலிவாக்கம் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.