பாலி: எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்கக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தோனேஷியா தலைநகர் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ஆற்றல், பாதுகாப்பு, உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு. ஆற்றல் வழங்கலில் எந்த தடையும் இல்லாமல், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.