மேட்டூர்: தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி 20,200 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலையும் நீர்வரத்து 20,200 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 20 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத் திற்கு விநாடிக்கு 200 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.