சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமஜெயம் கொலை விசாரணையை மாநில அரசே நடத்தக்கோரி அவரது மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையை நவ.21ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.