×

பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பாராட்டி விருது.. அமைச்சர் சிவசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள்..!!

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் தலைமை செயலகத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஒவ்வொரு வருடமும் நகர்புற உள்கட்டமைப்பு சார்பாக பொதுமக்களிடம் நட்புணர்வோடு செயல்படும் நிறுவனங்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்குவது நடைமுறையில் உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க பயணிகள் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எற்படும் குறைகளை வாட்ஸ் அப் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தீர்வு செய்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை பாராட்டி 2022-ம் வருடத்திற்குரிய விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் மேற்கூறிய நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக ஆசிரியர் அவர்கள் மூலம் புது டில்லியில் கடந்த 7ம் தேதி  நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இளங்கோவன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட இவ்விருதினை போக்குவரத்துத் துறை அமைச்சர எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களிடம் மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

Tags : Government Rapid Transport Corporation , Government Rapid Transport Corporation, Award, Minister Sivashankar, Congratulations
× RELATED சொந்த ஊர் சென்று வாக்களிக்க வசதியாக 10,124...