டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நவ.6ம் தேதி, வீட்டு மாடியில் இருந்து விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உடனடியாக வேறு நபர்களுக்கு பொருத்தப்பட்டன.