×

கொடநாடு வழக்கு: 3600 பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

உதகை: கொடநாடு கொலை, கொள்ள வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றத்தில் 3600 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தததாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன; சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Kodanadu , Kodanadu case: 3600-page investigation report handed over to court
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...