×

வீட்டை உடைத்து 30 சவரன் திருட்டு


ஆலந்தூர்: நங்கநல்லூர் லட்சுமிநகர் 3வது தெருவில் உள்ள வீட்டில் கடந்த 8 வருடங்களாக வாடகைக்கு குடியிருப்பவர் சாமிநாதன் (67). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர். கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு சுமங்கலி பூஜைக்கு சென்று விட்டார். அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு சாமிநாதன், குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து, பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்


Tags : House breaking, 30 Sawaran, theft
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...