×

திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை

சென்னை: திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. மழைநீர் வடிகால் மூலம் உடனுக்குடன் வடிந்து விடுகிறது என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூறியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா, மழைநீர் வடிகால்வாயில், அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா என்பதை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இருவரும் இணைந்து அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் தண்ணீர் தேங்கவில்லை. மழைநீர் வடிகால்கள் மூலமாக உடனுக்குடன் வடிந்து விடுகிறது. சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலை பகுதியில், தேங்கும் மழை நீரை அகற்றும் பொருட்டு, மழைநீர் அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், ரூ.1.05 கோடி மதிப்பிலான பணிகள், பருவமழை முடிந்தபின், துவக்கப்படும். உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுத்தாங்கலில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின் கீழ், 435 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால், ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில், மழைநீர் தேங்காது.

அண்ணா பிரதான சாலை, காமராஜர் சாலை,  பாரதிதாசன் சாலைகளில்,  தேங்கும் மழைநீரை  அடையாற்றுக்கு வெளியேற்றும் பொருட்டு, உள்வட்டச் சாலையில் 2.0மீx2.0 மீ அளவு கொண்ட  மழைநீர் வடிகால் 810 மீட்டர்  நீளத்துக்கு,  ரூ.5.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இப்பகுதியில் மழைநீர் துரிதமாக வெளியேறிவிடும். சைதாப்பேட்டை, அண்ணா சாலையில், பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து, மாம்பலம் கால்வாய் வரை, 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழைநீர் வடிகால், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

பெரிய அண்ணா சாலையில், கிண்டி, ஹப்லீஸ் ஓட்டல் அருகில், சென்ற ஆண்டு மிகுந்த மழைநீர் தேங்கி, போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, 2 இடங்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் முன்வார்ப்பு கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. உள்வட்டச் சாலையில், அடையாற்றுக்குச் செல்லும் வடிகால் 100 மீட்டர் நீளம், பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டையில், அண்ணா சாலையை ஒட்டியுள்ள பஜார் சாலையில், நீர் தேங்குவதை தவிர்க்க அண்ணா சாலையில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து மாம்பலம் கால்வாய் வரை 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழை நீர் வடிகால்   கால்வாயை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உள்வட்டச் சாலையில் அடையாற்றுக்கு செல்லும் மழைநீர் வடிகாலை புனரமைக்கும் பொருட்டு 100 மீட்டர் நீளத்திற்கு மழைநீர்வடிகால்வாய் ரூ.1.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை உள்ள மழைநீரை அடையாற்றுக்கு வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் ஆய்வு பணிகளை முடித்தப் பின்னர், துரைப்பாக்கத்திற்கு சென்று, சதுப்பு நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சதுப்பு நிலப்பகுதிகளில் குப்பைகளையும், கழிவு பொருட்களையும் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி  துணை மேயர் மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் ப.செந்தில், கோட்டப் பொறியாளர், வ.ரவி, உதவிக்கோட்டப் பொறியாளர் ஆனந்தராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Chennai , The work done by the DMK regime, Chennai, water is not stagnant
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி