×

டெல்டாவில் கனமழையால் நஷ்டம் விவசாயிகளுக்கு இழப்பீடு தர ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: டெல்டாவில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமுற்றதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

சில ஊர்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு, தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும், மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கொடுக்கவும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும்.


Tags : GK Vasan ,Delta , Heavy rains in Delta, compensation to farmers, insists GK Vasan
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...