திருப்பரங்குன்றம்: ஓபிஎஸ் ஒரு செல்லாத ஆயிரம் ரூபாய் ேநாட்டு என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அளித்த பேட்டி: அதிமுகவை சேர்ந்த 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம். எங்கள் சட்ட திட்டப்படி கட்சியிலிருந்து ஒருவர் விலக்கப்பட்டால் அவரிடம் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. நீதிமன்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.