உடுமலை : உடுமலை அருகே திருமூர்த்திமலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்வதும், பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக அருவியில் தண்ணீர் அதிகளவு வருகிறது. இதனால் நீர்வரத்தை கண்காணித்து, வனத்துறையினர் அருவிக்கு பொதுமக்களை அனுமதித்து வருகின்றனர்.