×

குருவரெட்டியூரில் பழமையான அரசமரத்தை வெட்டியதை கண்டித்து மக்கள் மறியல்

பவானி : அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர், அரச மரத்து வீதியில் சுமார் 100 வருட பழமையான அரச மரம் உள்ளது. இம்மரத்தின் கிளைகளில் மின்கம்பிகள் உரசியபடி சென்றதால், மரக்கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால், மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, பிற பகுதிகள் அனைத்தும் வெட்டி துண்டுகளாக்கப்பட்டன.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குருவரெட்டியூர் பஸ் நிலையம் அருகே நேற்று கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மரம் வெட்டப்பட்டது குறிதத்து வருவாய் துறையினருக்கு புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியதால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Guruvareteur , Bhavani, ammapettai,royal tree, people protest
× RELATED அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை