சென்னை: பேரறிவாளனை தொடர்ந்து மீதமுள்ள 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2018ல் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்றிருந்தால் அப்போதே விடுவிக்கப்பட்டிருப்பார்கள். அமைச்சரவை பரிந்துரை, தீர்மானம் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.